skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு
  • கிங்Dom of கீழக்கரை

சமையல் குறிப்பு

சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா

|


Aloo Mutter
உருளைக்கிழங்கு சத்தானது, மாவுச்சத்து நிறைந்தது. பச்சைப்பட்டாணியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டும் சேர்த்து செய்யப்பட்ட சமையல் உடல் நலத்திற்கு ஏற்றது. ஆலு மட்டர் குருமா என்று வடநாட்டிலும், தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு பட்டாணி குருமா என்றும் அழைக்கப்படுகிறது. எளிதில் செய்யக்கூடிய சைவ சமையல் இது.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

பச்சைப் பட்டாணி - 1 கப்

வெங்காயம் - 2 பெரியது

தக்காளி - 1/4 கிலோ

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

ஆலு மட்டர் செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக் நறுக்கி வேகவைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். பச்சைப் பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயையும் நெய்யையும் கலந்து, காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிய விடவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக குழைய வதக்கவும்.

இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இந்த கலவையில் வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை போட்டு கிளறவும், பின்னர் பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கிரோவி பதம் வந்த உடன் மல்லித்தழை போட்டு இறக்கவும். சுவையான ஆலு மட்டர் மசாலா தயார். சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

0 comments
0 Responses

« Newer Post Older Post »
Blogger Widget
Scroll to top widget @Netoops Blog.blogspot.com

Popular Posts

  • சமையல்களில் பெரும் பங்காற்றும் - தக்காளி ரசம் ! - செய்முறை.
    தென்னிந்திய சமையல்களில் பெரும் பங்கு வைப்பது ரசம். ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசம்  செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தா...
  • சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்! - செய்முறை.
    சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வதற்கான எளிதான செய்முறை. தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்) மிளகு - 2- 3 தேக...
  • ஹைதராபாத் சிக்கன் பிரியாணி! - செய்முறை!
    ஹைதராபாத் சிக்கன் பிரியாணி என்பது சிக்கன் மற்றும் பாஸ்மதி அரிசி சேர்த்து குறைந்த சூட்டில் தம் போடுவதாகும். எளிய முறையில் ஹைதராபாத் ச...
  • தக்காளி குருமா செய்வோமா?
    சுவையான தக்காளி குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. ரேவதி சண்முகம் அவர்களின் செய்முறை குறிப்பை த...
  • தித்திக்கும் கேரட் அல்வா!
    காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும...
  • முட்டை கொத்து பரோட்டா!
    முட்டை கொத்து பரோட்டா! சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் பரோட்டா – 5 ம...
  • போண்டா செய்வது எப்படி?
    மைதா போண்டா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள் மைதா மாவு – 1  கப் இட்லி மாவு – 1 /2 கப் பெரிய வெங்காயம்...
  • கேரளா மீன் குழம்பு
    சுவையான கேரளா மீன் குழம்பு / மீன் கூட்டான் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் சின்ன மீன் – 1/2 கிலோ (தலை,...
  • மசாலா தோசை - செய்முறை விளக்கம்.
    சுவையான மசாலா தோசை செய்வதற்கான சமையல் குறிப்பு.   தேவையான பொருட்கள் இட்லி அரிசி – 1 /2 கப் பச்சை அரிசி – 1 /2 கப் உளுத்தம்ப...
  • புளிப்பு மாதுளை சாதம்
    தேவையான பொருட்கள்.....   உதிரியாக வடித்த பச்சரிசி சாதம்  - 1 கப் புளிப்பு மாதுளம் பழம் - 2 பழம் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ...

Followers

Follow Me On TwitterFind Us On FacebookSubscribe to my feed நண்பருக்கு அறிமுகம் செய்ய

Blog Archive

  • Sept 2012 (1)
  • Apr 2012 (1)
  • Mar 2012 (2)
  • Feb 2012 (44)
இமெயில் மூலம் பெருக

Enter your email address:

Scroll to top widget @Netoops Blog.blogspot.com
Copyright © 2012.சமையல் குறிப்பு - All Rights Reserved.